இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு
By: vaithegi Sun, 23 Oct 2022 2:40:04 PM
புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு ..... இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-
இதனை அடுத்து இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது.