Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வழி தவறி வந்த 4 புலிக்குட்டிகள் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு

வழி தவறி வந்த 4 புலிக்குட்டிகள் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு

By: Nagaraj Sat, 11 Mar 2023 6:57:15 PM

வழி தவறி வந்த 4 புலிக்குட்டிகள் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு

திருப்பதி: வழி தவறி வந்த புலிக்குட்டிகள்... ஆந்திர வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த 4 புலிக்குட்டிகள் திருப்பதி உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள நந்தியாலா மாவட்டம் பெத்தா கும்மிடாபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்புதரில் 4 பெண் புலி குட்டிகளை கிராம மக்கள் பார்த்தனர். அவர்களை மீட்டு ஆத்மகூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

forest,nandiala district,tiger, ,ஆந்திர வனப்பகுதி, நந்தியாலா மாவட்டம், புலிக்குட்டிகள்

தாயிடம் இருந்து பிரிந்து சென்ற புலிக்குட்டிகளை ஒன்று சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமரா மூலம் குட்டிகளின் தாயை கண்டுபிடிக்க முயன்றனர்.

அப்போது டி-108 என்ற எண் கொண்ட பெண் புலி குட்டிகளை ஈன்றது தெரிய வந்தது. குட்டிகளை விட்டு சென்ற பகுதிக்கு அருகே இரவு நேரத்தில் தாய்ப்புலி சுற்றித் திரிவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின், 2 நாட்களாக அப்பகுதியில் உலாவ விட்டு வனத்துறையினர் கண்காணித்தனர். ஆனால் தாய்ப்புலி வரவில்லை.

இதையடுத்து நேற்று நந்தியாலத்தில் இருந்து வேனில் 4 புலிக்குட்டிகள் ஏற்றப்பட்டு திருப்பதி உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு 4 குட்டிகளையும் வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags :
|
|