Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜீரியாவில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்கள் பாலியல் பலாத்காரம்

நைஜீரியாவில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்கள் பாலியல் பலாத்காரம்

By: Karunakaran Fri, 12 June 2020 11:56:29 AM

நைஜீரியாவில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்கள் பாலியல் பலாத்காரம்

நைஜீரியா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘போகோஹரம்’ இயக்க பயங்கரவாதிகள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பின் கொலை செய்வது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ‘வீ ஆர் டயர்ட்’ என்ற பெயரில் ‘ஹேஷ்டேக்’கில் மக்கள் அனைவரும் ஆவேசத்துடன் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்நாட்டின் கானோ மாகாணத்தில் டங்கோரா என்ற நகரத்தில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி தற்போது பிடிபட்டுள்ளான். 10 வயது சிறுமிகள் முதல் 80 வயது பாட்டி வரை அனைத்து வயது பெண்களையும் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

nigeria,women rape,arrest,tankora ,பாலியல் பலாத்காரம் ,நைஜீரியா,டங்கோரா

டங்கோரா நகரில் உள்ள ஒரு வீட்டில் இந்த குற்றவாளி புகுந்து பெண் குழந்தைகளின் படுக்கை அறைக்கு சென்றபோது, அந்தக் குழந்தைகளின் தாயார் அவனை துணிச்சலுடன் மடக்கிப்பிடித்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, போலீசார் அவனை கைது செய்தனர். இந்த செயலை அந்நகர தலைவர் அகமது யாவ் வரவேற்றுள்ளார்.

தற்போது டங்கோரா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியான வகையில் நீதி வழங்கப்படும் என அகமது யாவ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், கடந்த ஒரு வருடமாக நாங்கள் எங்கள் சொந்த வீடுகளிலேயே அச்சத்துடன் வாழ்ந்து வந்தோம். தொடர் கற்பழிப்பு குற்றவாளி வேலி தாண்டி உள்ளே வந்து பெண்களை பலாத்காரம் செய்தது எங்களுக்கு அச்சத்தை அளித்தது. இனி நாங்கள் நிம்மதியாக தூங்க முடியும் என்று கூறினர்.

Tags :
|