மிசோரம் மாநிலத்தில் மீண்டும் இன்று காலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
By: Karunakaran Wed, 24 June 2020 2:07:48 PM
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மிசோரம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. இருப்பினும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தின் சம்பாய் அருகே மீண்டும் இன்று காலை 8.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சம்பாயில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 31 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பலத்த பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
மிசோரம் மாநிலத்தில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அம்மாநில முதல்வரிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.