Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Tue, 13 Oct 2020 10:28:45 AM

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பரிசோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 186 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 15 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 611 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வில்லை.

virudhunagar district,corona virus,infection,treatment,kills ,விருதுநகர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

அவர்களில் 14 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 71 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 795ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன் தினம் 565 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் கிராமப்புறங்களிலேயே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே கிராமப்புறங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :