Advertisement

சென்னையில் 42 ஆயிரத்து 752 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Tue, 23 June 2020 12:37:57 PM

சென்னையில் 42 ஆயிரத்து 752 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 42 ஆயிரத்து 752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 623 பேர் உயிரிழந்துள்ளனர்.

chennai,coronavirus,vulnerability,tamil nadu,death ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,தமிழ்நாடு,பலி

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

ராயபுரம் - 6,484
கோடம்பாக்கம் - 4,649
திரு.வி.க.நகர் - 3,628
அண்ணாநகர் - 4,585
தண்டையார்பேட்டை - 5,227
தேனாம்பேட்டை - 5,110
திருவொற்றியூர் - 1,587
வளசரவாக்கம் - 1,784
பெருங்குடி - 884
அடையார் - 2,531
அம்பத்தூர் - 1,601
ஆலந்தூர் - 965
மாதவரம் - 1,191
சோழிங்கநல்லூர் - 808
மணலி - 624

Tags :