Advertisement

சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் 425 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Mon, 01 Aug 2022 06:35:58 AM

சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் 425 பேருக்கு கொரோனா உறுதி

பெய்ஜிங்: உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது.

இதனால் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.

corona,china,symptoms ,கொரோனா ,சீனா,அறிகுறிகள்

இதை அடுத்து நேற்று மட்டும் 448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 541 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 425 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,29,510 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
|
|