- வீடு›
- செய்திகள்›
- புதிதாக 4,300 அரசு பேருந்துகள்.. ஓட்டுநர், நடத்துநர் காலியிடம் நிரப்பப்பட உள்ளது .. அமைச்சர் சிவசங்கர்
புதிதாக 4,300 அரசு பேருந்துகள்.. ஓட்டுநர், நடத்துநர் காலியிடம் நிரப்பப்பட உள்ளது .. அமைச்சர் சிவசங்கர்
By: vaithegi Sun, 07 May 2023 3:49:36 PM
சென்னை: தமிழகத்தில் அரசுப்பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் எழுந்த புகார்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் ...
தமிழகத்தில் அரசு இலவசமாக பெண்கள் பயணிக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும், பணிக்கும் செல்லும் பெண்கள் எளிதாக பயணம் செய்ய முடிந்தது. இலவச நகர பேருந்து பயணம் காரணமாக கூடுதல் செலவு இல்லாமல் பெண்கள் பயணம் செய்து கொண்டு வருகின்றனர்.
ஆனால் இலவச பயணம் காரணமாக போக்குவரத்து துறை நஷ்டத்தில் செயல்படுவதாகவும்,இதனால் கிராம புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை அரசு குறைத்து உள்ளது. எனவே மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி புகார் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், அரசு எந்த நகரப்பேருந்தின் செயல்பாட்டையும் குறைக்கவில்லை எனவும், கூடுதலாக 4,300 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும், அதேபோன்று, காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்து உள்ளார்.