Advertisement

தமிழகத்தில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

By: Nagaraj Sat, 10 Sept 2022 11:14:00 PM

தமிழகத்தில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

சென்னை: 434 பேருக்கு கொரோனா... தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 434 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,73,236-ஆக அதிகரித்துள்ளது.

recovered,corona,treatment,death toll,coimbatore ,குணமடைந்தோர், கொரோனா, சிகிச்சை, பலி எண்ணிக்கை, கோவை

அதிகபட்சமாக சென்னையில் 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 59, செங்கல்பட்டில் 39 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை.


இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,038 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,30,302-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,896 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

Tags :
|