அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 43742 பேருக்கு கொரோனா
By: Nagaraj Sun, 05 July 2020 4:32:28 PM
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 43,742 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 28,36,764 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 252 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 1,29,657 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 12.60 லட்சம் பேர் வரையில் குணமடைந்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 18 பேர் பூரண
குணமைடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு
குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து
74 ஆகப் பதிவாகியுள்ள நிலையில் இன்னும் 160 பேர் தொடர்ந்தும்
வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றினால்
இதுவரை 11 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.