Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்காவில் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 19 Aug 2020 12:41:28 PM

அமெரிக்காவில் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 670 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2 கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 83 ஆயிரத்து 429 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 64 லட்சத்து 73 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

usa,corona virus,treatment,infection,death ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பாதிப்பு,உயிரிழப்பு

இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய காலை நிலவரப்படி, மேலும் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 56,55,974 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அதே கால அளவில் 1,358 உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,75,074 கோடியைக் கடந்தது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 30,11,098 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|