Advertisement

சென்னையில் 44 ஆயிரத்து 205 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Wed, 24 June 2020 11:43:34 AM

சென்னையில் 44 ஆயிரத்து 205 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 2,516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 44 ஆயிரத்து 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 645 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

tamil nadu,coronavirus,madras,vulnerability,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சென்னை,பாதிப்பு,சிகிச்சை

ராயபுரம் - 6,607
கோடம்பாக்கம் - 4,794
திரு.வி.க.நகர் - 3,741
அண்ணாநகர் - 4,766
தண்டையார்பேட்டை - 5,355
தேனாம்பேட்டை - 5,213
திருவொற்றியூர் - 1,652
வளசரவாக்கம் - 1,880
பெருங்குடி - 899
அடையார் - 2,684
அம்பத்தூர் - 1,644
ஆலந்தூர் - 978
மாதவரம் - 1,262
சோழிங்கநல்லூர் - 860
மணலி - 669

Tags :
|