தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்
By: Monisha Mon, 12 Oct 2020 09:31:31 AM
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று 5 ஆயிரத்து 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.
கொரோன வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 239
செங்கல்பட்டு - 2,195
சென்னை - 13,751
கோவை - 4,917
கடலூர் - 1,138
தர்மபுரி - 738
திண்டுக்கல் - 390
ஈரோடு - 1,099
கள்ளக்குறிச்சி - 342
காஞ்சிபுரம் - 896
கன்னியாகுமரி - 776
கரூர் - 393
கிருஷ்ணகிரி - 793
மதுரை - 776
நாகை - 512
நாமக்கல் - 1,084
நீலகிரி - 799
பெரம்பலூர் - 94
புதுக்கோட்டை - 556
ராமநாதபுரம் - 186
ராணிப்பேட்டை - 346
சேலம் - 2,313
சிவகங்கை - 197
தென்காசி - 186
தஞ்சாவூர் - 947
தேனி - 447
திருப்பத்தூர் - 454
திருவள்ளூர் - 1,578
திருவண்ணாமலை - 753
திருவாரூர் - 548
தூத்துக்குடி - 531
திருநெல்வேலி - 693
திருப்பூர் - 1,167
திருச்சி - 701
வேலூர் - 792
விழுப்புரம் - 521
விருதுநகர் - 213
விமானநிலைய கண்காணிப்பு - 32
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2