Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,417 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,417 பேருக்கு கொரோனா

By: vaithegi Tue, 06 Sept 2022 10:39:15 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,417 பேருக்கு கொரோனா

இந்தியா: புதிதாக 4,417 பேருக்கு கொரோனா ... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு பெரும்பாலும் சரிவுடனும், அவ்வப்போது ஏற்ற இறக்கமாகவும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 809 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

எனவே இதன்படி நேற்று 5 ஆயிரத்து 910 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 ஆயிரத்து 417 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதை அடுத்து இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,66,862 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று , தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,030 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6,032 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,86,496 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 52,336 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை மட்டும் 2,13,72,68,615 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,93,670 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு இடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் மட்டும் 3,67,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,77,46,764 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|