மணிப்பூர் மாநிலத்தில் ரிக்டர் 4.5 அளவிலான நில நடுக்கம்
By: vaithegi Fri, 23 Sept 2022 1:29:48 PM
மணிப்பூர் : மணிப்பூர் மாநிலம் மொய்ராங் என்ற பகுதியில் இன்று காலை சுமார் 10.02 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மொய்ராங்கிற்கு தென்கிழக்கே 100 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும் பெரிய அளவிலான சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இந்நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து சாலையில் நின்றனர்.
மேலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் குலுங்கியதாக உள்ளூர்வாசிகள் தரப்பில் தெரிவித்தனர்.