Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Thu, 24 Sept 2020 09:32:55 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கல் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 325 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 363 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 10 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 149
செங்கல்பட்டு - 2,394
சென்னை - 9,868
கோவை - 4,630
கடலூர் - 2,067
தர்மபுரி - 1,094
திண்டுக்கல் - 613
ஈரோடு - 1,113
கள்ளக்குறிச்சி - 705
காஞ்சிபுரம் - 1,191
கன்னியாகுமரி - 763
கரூர் - 502
கிருஷ்ணகிரி - 785
மதுரை - 764
நாகை - 790
நாமக்கல் - 882
நீலகிரி - 719
பெரம்பலூர் - 111
புதுக்கோட்டை - 828
ராமநாதபுரம் - 205
ராணிப்பேட்டை - 607
சேலம் - 2,350
சிவகங்கை - 297
தென்காசி - 558
தஞ்சாவூர் - 1,260
தேனி - 513
திருப்பத்தூர் - 630
திருவள்ளூர் - 1,597
திருவண்ணாமலை - 1,045
திருவாரூர் - 874
தூத்துக்குடி - 750
திருநெல்வேலி - 925
திருப்பூர் - 1,667
திருச்சி - 817
வேலூர் - 940
விழுப்புரம் - 860
விருதுநகர் - 341
விமானநிலைய கண்காணிப்பு - 48
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :