Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Sat, 03 Oct 2020 09:47:13 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 200
செங்கல்பட்டு - 2,327
சென்னை - 12,013
கோவை - 4,913
கடலூர் - 1,376
தர்மபுரி - 893
திண்டுக்கல் - 392
ஈரோடு - 1,164
கள்ளக்குறிச்சி - 356
காஞ்சிபுரம் - 875
கன்னியாகுமரி - 789
கரூர் - 450
கிருஷ்ணகிரி - 793
மதுரை - 705
நாகை - 466
நாமக்கல் - 1,039
நீலகிரி - 803
பெரம்பலூர் - 129
புதுக்கோட்டை - 726
ராமநாதபுரம் - 151
ராணிப்பேட்டை - 491
சேலம் - 2,624
சிவகங்கை - 217
தென்காசி - 392
தஞ்சாவூர் - 1,746
தேனி - 507
திருப்பத்தூர் - 502
திருவள்ளூர் - 1,617
திருவண்ணாமலை - 970
திருவாரூர் - 935
தூத்துக்குடி - 517
திருநெல்வேலி - 866
திருப்பூர் - 1,611
திருச்சி - 741
வேலூர் - 851
விழுப்புரம் - 914
விருதுநகர் - 216
விமானநிலைய கண்காணிப்பு - 15
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :