Advertisement

தமிழகத்தில் இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Sat, 19 Nov 2022 9:42:44 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: புதிதாக 47 பேருக்கு கொரோனா .... தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 23 ஆண்கள், 24 பெண்கள் உள்பட மொத்தம் 47 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிகபட்சமாக சென்னையில் 7 பேர் உள்பட மொத்தம் 17 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அரியலூர், மதுரை, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பாதிப்பு எதுவும் இல்லை.

corona,chennai ,கொரோனா ,சென்னை

மேலும், 12 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 12 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 177 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 515 பேர் சிகிச்சையில் உள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|