சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் சின்னம்
By: Monisha Tue, 24 Nov 2020 08:15:39 AM
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் புயல் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிவர் புயல் சின்னம் சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் இருந்து 440 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் மணிக்கு 15 கி.மீ. வேகத்திலிருந்து 4 கி.மீ. ஆக குறைந்தது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறுகிறது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :
symbol |
chennai |