ஆந்திராவில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Sat, 16 May 2020 11:58:51 PM
புதிதாக 48 பேருக்கு கொரோனா... ஆந்திராவில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகளில் மஹா., முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் மற்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் கூடிக்கொண்டே செல்கிறது. ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து 2000 ஐ கடந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,205 ஆக உள்ளது.
இதில் 5,278 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் டில்லியில் மட்டும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 129 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இதுவரை மொத்தம் 3,926 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
டில்லியில் 76 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 1983 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.