Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் ..குரூப்-4 தேர்வை 49 ஆயிரத்து 518 பேர் எழுதினர். கால தாமதமாக வந்ததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது

திருவள்ளூர் ..குரூப்-4 தேர்வை 49 ஆயிரத்து 518 பேர் எழுதினர். கால தாமதமாக வந்ததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது

By: vaithegi Mon, 25 July 2022 4:57:29 PM

திருவள்ளூர் ..குரூப்-4 தேர்வை 49 ஆயிரத்து 518 பேர் எழுதினர். கால தாமதமாக வந்ததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது

திருவள்ளூர: குரூப்-4 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 பதவிக்கான தேர்வுகள் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஆகிய பகுதிகளில் 195 தேர்வு மையங்களில் 60 ஆயிரத்து 305 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

மேலும் இதற்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் விண்ணப்பித்திருந்த 60 ஆயிரத்து 305 தேர்வர்களில் நேற்று 49 ஆயிரத்து 518 பேர் தேர்வு எழுதினார்கள். மீதமுள்ள 10 ஆயிரத்து 787 பேர் தேர்வு எழுதவில்லை.

இதை அடுத்து திருவள்ளூரில் உள்ள தேர்வு மையத்தில் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்

group 4,thiruvallur ,குரூப் 4 ,திருவள்ளூர்

திருவள்ளூர் தாலுக்காவிற்குட்பட்ட பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வு மையங்களில் ஒரு நிமிடம் காலதாமதாக வந்தவர்கள் முதல் அரை மணி நேரம் தாமதமாக வந்தவர்கள் வரை ஒருவரையும் தேர்வு மையத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதனால் அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்வு எழுத அனுமதிக்காததால் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

Tags :