Advertisement

தமிழகத்தில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Wed, 31 Aug 2022 9:46:33 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை: கொரோனா பாதிப்பு பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 68 ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona,chennai ,கொரோனா ,சென்னை

இதையடுத்து தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 25 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

மேலும் இதுவரை மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,035 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|