Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 30 Nov 2023 3:01:04 PM

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழாவையொட்டி வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் மையப் பகுதியில் அமைந்து உள்ள புனித சவேரியார் பேராலயம் உலகிலேயே புனித சவேரியாருக்கென்று அமைக்கப்பட்ட முதல் ஆலயமாக விளங்கி வருகிறது.

இந்த கோட்டார் புனித சவேரியார் பேராலயத்திற்கு சாதி, மதம், சமய வேறுபாடு இல்லாமல் அனைத்து இன மக்களும் வருகை புரிந்து வருகின்றனர். இக்கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்

local holiday,kanyakumari , உள்ளூர் விடுமுறை,கன்னியாகுமரி

இந்த நிலையில், புனித சவேரியார் பேராலய திருவிழா நவ.24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மேலும், இத்திருவிழாவின் முக்கிய அம்சமான தேர் பவனி வருகிற டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக வரும் டிசம்பர் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

Tags :