Advertisement

இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 13 Dec 2022 4:18:19 PM

இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நீலகிரி: வருகிற 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை .... நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி

இதனை அடுத்து மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி போன்ற 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

local holiday,nilgiris ,உள்ளூர் விடுமுறை,நீலகிரி

இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி 8 கிராம பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல கிராமங்களுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள்.

இந்நிலையில், படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி ஜனவரி 4-ம் தேதிபுதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags :