Advertisement

ஜெர்மனியில் 5 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

By: Nagaraj Fri, 04 Sept 2020 8:39:54 PM

ஜெர்மனியில் 5 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

5 குழந்தைகள் மர்மமான முறையில் சாவு... ஜெர்மனி நாட்டின் சொலிங்கின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6 குழந்தைகளுடன் ஒரு பெண் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் தாய் சொலிங்கின் நகர போலீசாரை தொடர்பு கொண்டு தனது மகளின் வீட்டில் ஏதோ பிரச்சனை உள்ளதாக சந்தேகம் தெரிவித்தார்.

இதனால் போலீசார் அங்கு சென்று அந்த பெண் தனது 6 குழந்தைகளுடம் வசித்து வந்த பிளாட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு 5 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்தனர். ஒரு குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது.

children,mysterious pattern,great shock,residential area ,குழந்தைகள், மர்மமான முறை, பெரும் அதிர்ச்சி, குடியிருப்பு பகுதி

பின்னர் அந்த பெண் தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள டுஸ்சில்டோர்ஃப் ரெயில் நிலையித்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதன்பின், படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

5 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags :