Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை

மாணவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை

By: vaithegi Wed, 31 Aug 2022 7:57:08 PM

மாணவர்களுக்கு  அக்டோபர் மாதத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விரைவில் தொடங்கப்பட்டுள்ளது. ஏனெனில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் அனைத்து பாடங்களையும் முடிக்க சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது.

இதை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு விரைவில் கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டுத் தேர்வுக்குரிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

consecutive holiday,october ,தொடர் விடுமுறை,அக்டோபர்

எனவே அதன்படி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும் 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 23 முதல் 30ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதையடுத்து தேர்வு முடிந்த பிறகு காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றிற்கு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 6ம் தேதி முதல் திறக்கப்படும்.

Tags :