இந்த மாவட்டங்களுக்கு 5 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை
By: vaithegi Mon, 13 Nov 2023 3:34:44 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 24 மணி நேரத்தில் இது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம்.
இதையடுத்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்து தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி நிலவும். இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை நவம்பர் 17ஆம் தேதி வரை நிலவக் கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.