Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் புதியதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் புதியதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: vaithegi Thu, 19 Jan 2023 9:34:57 PM

தமிழ்நாட்டில் புதியதாக  5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,vaccine ,கொரோனா ,தடுப்பூசி

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து பதிவாகிய வண்ணம் இருக்கிறது. இன்று ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதில், 4 பெண்கள் மற்றும் 1 ஆண் அடங்குவார்கள். சென்னையில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் கோவையில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அதே சமயத்தில் 35 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோன்று தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. மாநிலத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 9 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 49 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Tags :
|