50 சுகாதார நிலையங்கள் அமைய உள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு
By: vaithegi Tue, 16 Aug 2022 1:28:26 PM
சென்னை, மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர். அதன் பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:- தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாகவே மாற்றப்பட்டுள்ளது.
இதை அடுத்து 95.96 % முதல் தவணை தடுப்பூசியும், 89.44 % இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 25 ஆரம்ப சுகாதார நிலையம், 25 சுகாதார நிலையம் என மொத்தமாக 50 சுகாதார நிலையங்கள் அமைய உள்ளன. அதற்கான அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் வெளியிட இருக்கிறார்.
தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் கட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தால் தற்போது 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. மிக விரைவில் தமிழகத்தில் 79 புதிய மருத்துவமனைகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என அவர் பேசினார்.