Advertisement

பீகாரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50 பேர் படுகாயம்

By: Nagaraj Thu, 12 Oct 2023 5:57:36 PM

பீகாரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50 பேர் படுகாயம்

பீகார்: ரயில் விபத்து... பீகாரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

டெல்லி ஆனந்த் விகாரில் இருந்து அஸ்ஸாமின் கவுஹாத்திக்கு செல்லும் வடகிழக்கு சூப்பர் ஃபாஸ்ட் ரயில் பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இரவு 9 மணி அளவில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த ரயிலின் 6 ஏசி பெட்டிகள் உள்பட 21 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் கவிழ்ந்துக் கிடந்தன. இதில் ஏராளமான பயணிகள் காயம் அடைந்தனர்.

alternate train,arrangement,delhi,passengers,hospitals,accident ,மாற்று ரயில், ஏற்பாடு, டெல்லி, பயணிகள், மருத்துவமனைகள், விபத்து

தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விபத்து காரணமாக ஏராளமான ரயில்கள் நகர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ரயிலின் பயணிகளை ஏற்றிச் செல்ல மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags :
|