Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயம் - ஐ.நா. சபை

உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயம் - ஐ.நா. சபை

By: Monisha Sun, 12 June 2022 6:01:20 PM

உக்ரைனில் 50 லட்சம் பேர் வன்முறை மற்றும் தாக்குதலில் சிக்கும் அபாயம் - ஐ.நா. சபை

கீவ் : உக்ரைன் மீது 3 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ராணுவம் மட்டுமின்றி, உக்ரைன் பொதுமக்களும் பாதிப்படைந்து வருகின்றனர். பொதுமக்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த போர் காரணமாக, இதுவரை 250-க்கும் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இம்மாத தொடக்கத்தில் ஐ.நா. சபை தகவல் தெரிவித்தது. தற்போது, ரஷியாவின் தாக்குதலில் சிக்கி மரியுபோல் நகரின் டோநெக் பகுதியில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதனால் ரஷியா உடனான போரில் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 492 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ukraine,mariupol,un,russia,war ,உக்ரைன், மரியுபோல், ஐ.நா., ரஷ்யா, போர்

இதுகுறித்து உக்ரைன் அரசு தெரிவிக்கையில், இந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படாதவை. தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷியாவின் தாக்குதலை தடுக்க உக்ரைன் படைகள் அனைத்தையும் செய்து வருகிறது. உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது. தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் வான்வழி தாக்குதலை தொடங்கி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

Tags :
|
|