Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் ... தமிழ்நாடு அரசு

நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் ... தமிழ்நாடு அரசு

By: vaithegi Wed, 21 June 2023 1:18:26 PM

நாளை முதல் 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும்   ...  தமிழ்நாடு அரசு

சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனவே மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

government of tamil nadu,liquor retail stores ,தமிழ்நாடு அரசு,மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்

மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அதன் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 22.6.2023 முதல் செயல்படாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags :