Advertisement

சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று

By: Nagaraj Sun, 10 May 2020 7:34:51 PM

சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று

இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்தது... சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் இன்று மட்டும் மேலும் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3839 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் சென்னையில் ஒரே நாளில் அதிகளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது இதுதான்.

சென்னையில் நேற்று 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையானது 47 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று 4 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று 3 பேர் பலியாகியுள்ளனர்.

corona,impact,madras,increase,3 killed ,கொரோனா, பாதிப்பு, சென்னை, அதிகரிப்பு, 3 பேர் பலி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 859 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து அங்கு மொத்த பலி எண்ணிக்கை 29 ஆக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை 222 பேர் குணமடைந்துள்ளனர். பிரிகான் மும்பை மாநகராட்சி மேற்குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

Tags :
|
|
|