தமிழகத்தில் 51 ஆயிரத்து 348 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மாவட்ட வாரியாக முழு தகவல்
By: Monisha Tue, 21 July 2020 09:55:15 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் மாவட்ட வாரியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 21 ஆயிரத்து 776 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் - 95
செங்கல்பட்டு - 2,549
சென்னை - 15,127
கோவை - 1,259
கடலூர் - 448
தர்மபுரி - 271
திண்டுக்கல் - 893
ஈரோடு - 195
கள்ளக்குறிச்சி - 663
காஞ்சிபுரம் - 2,187
கன்னியாகுமரி - 1,465
கரூர் - 88
கிருஷ்ணகிரி - 153
மதுரை - 3,263
நாகை - 147
நாமக்கல் - 164
நீலகிரி - 339
பெரம்பலூர் - 44
புதுக்கோட்டை - 515
ராமநாதபுரம் - 1,030
ராணிப்பேட்டை - 1007
சேலம் - 850
சிவகங்கை - 873
தென்காசி - 764
தஞ்சாவூர் - 665
தேனி - 1,310
திருப்பத்தூர் - 172
திருவள்ளூர் - 3,457
திருவண்ணாமலை - 1,572
திருவாரூர் - 293
தூத்துக்குடி - 2,077
திருநெல்வேலி - 1,458
திருப்பூர் - 250
திருச்சி - 1,046
வேலூர் - 1,587
விழுப்புரம் - 777
விருதுநகர் - 1,909
விமானநிலைய கண்காணிப்பு - 370
ரெயில் நிலைய கண்காணிப்பு - 16