Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Sat, 10 Oct 2020 09:50:37 AM

தமிழகத்தில் புதிதாக 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,185-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,46,128-ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 357 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 36
செங்கல்பட்டு - 343
சென்னை - 1,288
கோவை - 397
கடலூர் - 150
தர்மபுரி - 67
திண்டுக்கல் - 44
ஈரோடு - 137
கள்ளக்குறிச்சி - 37
காஞ்சிபுரம் - 147
கன்னியாகுமரி-96
கரூர்-34
கிருஷ்ணகிரி-84
மதுரை-93
நாகப்பட்டினம்-51
நாமக்கல்-147
நீலகிரி-109
பெரம்பலூர்-7
புதுக்கோட்டை-69
ராமநாதபுரம் -22
ராணிப்பேட்டை-62
சேலம்-295
சிவகங்கை-27
தென்காசி-14
தஞ்சாவூர்-240
தேனி-64
திருப்பத்தூர்-68
திருவள்ளூர்-226
திருவண்ணாமலை-93
திருவாரூர் -113
தூத்துக்குடி- 68
திருநெல்வேலி -72
திருப்பூர் -159
திருச்சி -81
வேலூர் -133
விழுப்புரம் -73
விருதுநகர்-20
விமான நிலைய கண்காணிப்பு - 1

Tags :