தமிழகத்தில் மாவட்ட வாரியாக இதுவரை 5,27,212 பேருக்கு கொரோனா பரிசோதனை
By: Monisha Mon, 08 June 2020 12:44:06 PM
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 269-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஒரேநாளில் 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 இல் இருந்து 16,999 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக முதல் முறையாக மாவட்ட வாரியான பரிசோதனைகளின் எண்ணிக்கை விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக இதுவரை மொத்தம் 5,27,212 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் - 3,950
செங்கல்பட்டு - 13,958
சென்னை - 1,21,950
கோவை - 22,872
கடலூர் - 11,918
தர்மபுரி - 9,854
திண்டுக்கல் - 7,582
ஈரோடு - 13,421
கள்ளக்குறிச்சி - 8,653
காஞ்சிபுரம் - 9,885
கன்னியாகுமரி - 18,366
கரூர் - 8,218
கிருஷ்ணகிரி - 6,565
மதுரை - 14,102
நாகை - 7,958
நாமக்கல் - 7,727
நீலகிரி - 5,604
பெரம்பலூர் - 3,999
புதுக்கோட்டை - 6,243
ராமநாதபுரம் - 7,074
ராணிப்பேட்டை - 5,480
சேலம் - 22,751
சிவகங்கை - 5,400
தென்காசி - 7,163
தஞ்சை - 17,820
தேனி - 16,945
திருவள்ளூர் - 11,065
திருவாரூர் - 8,448
திருச்சி - 14,453
நெல்லை - 17,624
திருப்பத்தூர் - 9,911
திருப்பூர் - 8,153
திருவண்ணாமலை - 21,996
தூத்துக்குடி - 13,227
வேலூர் - 16,279
விழுப்புரம் - 9,795
விருதுநகர் - 10,803