Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 528 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 528 பேருக்கு கொரோனா

By: vaithegi Sun, 23 Apr 2023 10:11:42 AM

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 528 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,676 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனாவில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 502 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு .

corona,treatment,death ,கொரோனா,சிகிச்சை ,உயிரிழப்பு

இதில் அதிகபட்சமாக சென்னையில் 104 பேருக்கும், கோவையில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 26 பேருக்கும் திருப்பூரில் 27 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திருவள்ளூரில் 22 பேருக்கும், ராணிப்பேட்டையில் 18 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருவாரூரில் 15 நபர்களுக்கும், திருச்சியில் `14 நபர்களுக்கும், மதுரையில் 16 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 13 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 10க்கும் கீழ் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|