Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வருகிற 17-ந்தேதி விண்ணில் பாய்கிறது

இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வருகிற 17-ந்தேதி விண்ணில் பாய்கிறது

By: Monisha Tue, 15 Dec 2020 08:21:51 AM

இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வருகிற 17-ந்தேதி விண்ணில் பாய்கிறது

இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வருகிற 17-ந்தேதி விண்ணில் பாய உள்ள நிலையில் அதற்கான 'கவுண்ட்டவுன்' நாளை பகலில் தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பல செயற்கைகோளை வடிவமைத்து விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற தகவல் தொடர்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையமான சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் வருகிற 17-ந்தேதி மாலை 3.41 மணிக்கு வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

isro,pslv rocket,earth surveillance,countdown,satellite ,இஸ்ரோ,பி.எஸ்.எல்.வி. ராக்கெட்,பூமி கண்காணிப்பு,கவுண்ட்டவுன்,செயற்கைகோள்

கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு வருகிறது. 44.4 மீட்டர் உயரம் கொண்டது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்.

இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 'கவுண்ட்டவுன்' நாளை பகலில் தொடங்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து 'கவுண்ட்டவுனை' முடித்து கொண்டு திட்டமிட்டப்படி நாளை மறுதினம் (17-ந்தேதி) மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது என்று தெரிவித்தனர்.

Tags :
|