Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Sat, 22 Aug 2020 10:10:48 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 5 ஆயிரத்து 995 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 764 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 7 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 101 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,discharge ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம்:-
அரியலூர் - 602
செங்கல்பட்டு - 2,628
சென்னை - 12,708
கோவை - 3,066
கடலூர் - 2,854
தர்மபுரி - 183
திண்டுக்கல் - 875
ஈரோடு - 817
கள்ளக்குறிச்சி - 721
காஞ்சிபுரம் - 2,418
கன்னியாகுமரி - 1,554
கரூர் - 333
கிருஷ்ணகிரி - 282
மதுரை - 1,003
நாகை - 560
நாமக்கல் - 435
நீலகிரி - 232
பெரம்பலூர் - 253
புதுக்கோட்டை - 1,368
ராமநாதபுரம் - 553
ராணிப்பேட்டை - 1,258
சேலம் - 2,244
சிவகங்கை - 322
தென்காசி - 1,126
தஞ்சாவூர் - 880
தேனி - 2,258
திருப்பத்தூர் - 563
திருவள்ளூர் - 3,923
திருவண்ணாமலை - 915
திருவாரூர் - 485
தூத்துக்குடி - 637
திருநெல்வேலி - 1,308
திருப்பூர் - 597
திருச்சி - 1,014
வேலூர் - 1,110
விழுப்புரம் - 609
விருதுநகர் - 614
விமானநிலைய கண்காணிப்பு - 101
ரெயில் நிலைய கண்காணிப்பு - 4

Tags :