Advertisement

நாட்டில் ஒரே நாளில் 5357 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Sun, 09 Apr 2023 1:54:45 PM

நாட்டில் ஒரே நாளில் 5357 பேருக்கு கொரோனா உறுதி


இந்தியா : கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு ... நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு கொரோனா தொற்றின் ஓமைக்ரான் வேரியன்ட் மூலமாக தான் குறைந்த நேரத்தில் அதிக அளவில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறித்து அச்சம் ஏதும் இல்லாத நிலையில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்றின் பாதிப்பு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சரசரவென உயந்து கொண்டே வருகிறது.

மேலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மாநில மற்றும் மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது கடந்த 24 மணி நேர நிலவரப்படி ஆன பாதிப்பு எண்ணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் 5357 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதன் மூலமாக நாடு முழுவதும் 32,814 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|