Advertisement

தமிழகத்தில் புதிதாக 539 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sat, 27 Aug 2022 08:27:31 AM

தமிழகத்தில் புதிதாக 539 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: புதிதாக 539 பேர் பாதிப்பு... தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 539 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக 539 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,66,101-ஆக அதிகரித்துள்ளது.

corona,tamil nadu,affected,newly,recovered,chengalpattu ,கொரோனா, தமிழகம், பாதிப்பு, புதிதாக, குணமடைந்தனர், செங்கல்பட்டு

அதிகபட்சமாக சென்னையில் 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 69, செங்கல்பட்டு 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,034 ஆக உள்ளது.


நேற்று ஒரு நாளில் மட்டும் 628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,22,660-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,407 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

Tags :
|
|