தமிழகத்தில் கொரோனாவுக்கு 54 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்
By: Monisha Thu, 06 Aug 2020 09:47:51 AM
தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 175 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் - 220
செங்கல்பட்டு - 2,683
சென்னை - 11,811
கோவை - 1,571
கடலூர் - 1,802
தர்மபுரி - 87
திண்டுக்கல் - 540
ஈரோடு - 209
கள்ளக்குறிச்சி - 915
காஞ்சிபுரம் - 2,846
கன்னியாகுமரி - 1,955
கரூர் - 304
கிருஷ்ணகிரி - 449
மதுரை - 2,107
நாகை - 431
நாமக்கல் - 368
நீலகிரி - 164
பெரம்பலூர் - 170
புதுக்கோட்டை - 812
ராமநாதபுரம் - 424
ராணிப்பேட்டை - 1,677
சேலம் - 1,166
சிவகங்கை - 511
தென்காசி - 866
தஞ்சாவூர் - 812
தேனி - 2,668
திருப்பத்தூர் - 459
திருவள்ளூர் - 3,548
திருவண்ணாமலை - 2,148
திருவாரூர் - 287
தூத்துக்குடி - 1,840
திருநெல்வேலி - 2,136
திருப்பூர் - 332
திருச்சி - 1,423
வேலூர் - 1,311
விழுப்புரம் - 820
விருதுநகர் - 1,993