கனடாவில் கடந்த ஒரே நாளில் 565 பேர் கொரோனாவால் பாதிப்பு
By: Nagaraj Tue, 14 July 2020 2:30:10 PM
கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 565 பேர் பாதிப்படைந்ததோடு, 7பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20வது நாடாக கனடா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு
லட்சத்து 8 ஆயிரத்து 155 ஆக உயர்ந்துள்ளது. மேலும் எட்டு ஆயிரத்து 790 பேர்
மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 27 ஆயிரத்து 524 பேர்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 71 ஆயிரத்து 841 பேர் பூரண
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர இரண்டு ஆயிரத்து 159 பேரின்
நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.