Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 மாதத்தில் 578 கோயில்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்; அமைச்சர் உறுதி

2 மாதத்தில் 578 கோயில்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்; அமைச்சர் உறுதி

By: Nagaraj Thu, 20 Oct 2022 09:41:29 AM

2 மாதத்தில் 578 கோயில்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்; அமைச்சர் உறுதி

சென்னை: அன்னை தமிழ் அர்ச்சனை... அடுத்த இரண்டு மாதங்களில் 578 கோயில்களில் அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து மண்டல இணை மற்றும் துணை ஆணையர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரண்டு மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 578 திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் கடந்த 15 மாதங்களில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. 3118 ஆக்கிரப்மிப்பாளர்களிடம் இருந்து 2710 ஏக்கர் நிலம் 3566 கோடி மதிப்பில் சொத்துக்கள் மீட்க்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சொத்துக்களை வாடகைக்கு விட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

minister shekhar babu,temples,mother tamil,archanai,palani,counseling ,அமைச்சர் சேகர் பாபு, கோயில்கள், அன்னை தமிழ், அர்ச்சனை, பழனி, ஆலோசனை

48 முதுநிலை கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. மேலும் 578 கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் திட்டம் செயல்படுத்தப்படும். பௌர்ணமி விளக்கு பூஜை அதிகப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவராத்திரி பூஜையை 5 இடங்களில் இந்த ஆண்டு இரவு முழுவதும் நடத்த திட்டமிட்டு உள்ளோம். சங்கரன் கோவிலில் பாம்பாட்டி சித்தருக்கு விழா எடுக்கப்பட உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள் குறித்து இன்றைய 14 வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பழனியில் ஜனவரி நடைபெறும் குடமுழுக்கு குறித்து முழுமையாக ஆலோசித்துள்ளோம்.

குழந்தை திருமணம் சட்டத்திற்கு புறம்பானது. தீட்சிதர்கள் அல்ல யார் அதை செய்தாலும் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும். திமுகவிற்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு முடிவுரை எழுதப்படும் என தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|