Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

By: vaithegi Mon, 13 Nov 2023 10:07:06 AM

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று பெரும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களைகட்டியது. இச்சூழலில் இந்தாண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8:00 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், தீபாவளி அன்று காற்றின் தரத்தை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்ட வாரியாக கண்காணிப்பார்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

cases,crackers,chennai ,வழக்குகள் ,பட்டாசு ,சென்னை

இச்சூழலில் சென்னையில் பட்டாசு வெடித்ததன் காரணமாக காற்றின் தர குறியீடு 200 தாண்டியது. காற்று மாசு படும்போது ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படக்கூடும். இதய நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனால் பாதிப்படைவார்கள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை போது சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மேலும் அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

Tags :
|