Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 5 ஜி அலைவரிசை ஏலம்... 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை கோரப்பட்டது

5 ஜி அலைவரிசை ஏலம்... 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை கோரப்பட்டது

By: Nagaraj Thu, 28 July 2022 10:04:20 AM

5 ஜி அலைவரிசை ஏலம்... 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை கோரப்பட்டது

புதுடில்லி: 5 ஜி ஏலத்தின் உச்சம்... அடுத்த தலைமுறைக்கான '5ஜி' தொழில்நுட்பத்தில் அகண்ட அலைவரிசை சேவைக்கான உரிமத்திற்கு, நேற்று முன்தினம் ஏலம் துவங்கியது. அன்றைக்கு நான்கு சுற்றுகளில், 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் கோரப்பட்டது.

நேற்று ஒன்பது சுற்றுகள் முடிந்த நிலையில், 1.49 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டுள்ளதாக, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏலம் மூன்றாவது நாளாக இன்றும் நடக்க உள்ளது.

மொத்தம், 72 'கிகாஹெர்ட்ஸ்' அலைவரிசையை ஏலம் விட்டு, 4.30 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், குமார் மங்களம் பிர்லாவின் வோடபோன் ஐடியா, கவுதம் அதானியின் அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

5g auction,licensing,jio,investment,bharti airtel,bandwidth ,5ஜி ஏலம், உரிமம், ஜியோ, முதலீடு, பார்தி ஏர்டெல், அலைவரிசை

ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு, அவை கோரிய அகண்ட அலைவரிசையை மத்திய அரசு வரும் செப்டம்பரில் ஒதுக்க உள்ளது. 5ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி தொழில்நுட்பத்தில் தகவல் அனுப்புவதை விட, 5ஜி அலைவரிசையில் 10 மடங்கு வேகமாக தகவல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

ஒரே சமயத்தில் கோடிக்கணக்கானோர் தகவல்களை பரிமாறிக் கொள்ள, 5ஜி உதவும். ஒரு திரைப்படத்தை உயர் தரத்தில் சில வினாடிகளில் பதிவிறக்கலாம். மேலும் மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த சுகாதாரம், வாகனம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளும் 5ஜி சேவையால் பெரிதும் பயன் அடையும்.

ரிலையன்ஸ் ஜியோ, 10 மெகாஹெர்ட்ஸ் உரிமத்தை, 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டதை விட கூடுதலாக முதலீடு செய்து, 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, அகண்ட அலைவரிசை உரிமத்தை பெற்றுள்ளது. வோடபோன் ஐடியா, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ், டில்லி, கர்நாடகா தவிர்த்து, 20 தொலைதொடர்பு வட்டங்களில், 900 கோடி ரூபாய்க்கு அகண்ட அலைவரிசை உரிமையை வாங்கியுள்ளது.

இந்த ஏலம் வாயிலாக மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் முன்பணமாக, 13 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். அத்துடன், அடுத்த 19 ஆண்டுகளுக்கு, இதே தொகை ஆண்டுதோறும் கிடைக்கும்.

Tags :
|