Advertisement

இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 22 Mar 2023 12:12:42 PM

இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் அவர்கள் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பங்குனி உத்திரத்திருநாள் ஏப்ரல் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

எனவே திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாநில அரசு அலுவலர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்று அறிவித்துள்ளார்.

local holiday,tirunelveli ,உள்ளூர் விடுமுறை,திருநெல்வேலி

இதையடுத்து மேற்கண்ட தேதியில் பொது தேர்வு இருந்தால் அந்த தேர்வுகள் நடைபெறும் எனவும் மற்ற மாணவர்களுக்கு விடுமுறை எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் ஐந்தாம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் ஆறாம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது

அன்றைய தினம் உயர்கல்வி மாணவ மாணவியருக்கு மட்டும் வேலை நாள் பொருந்தாது எனவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :