Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை உயர்வு

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை உயர்வு

By: Nagaraj Wed, 08 Feb 2023 11:53:00 AM

துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்... பலி எண்ணிக்கை உயர்வு

துருக்கி: துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது.

துருக்கியில் நேற்று முன்தினம், மற்றும் நேற்றும் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் சிரியாவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது.

earthquakes,scale,today,turkey, ,சிரியா, துருக்கி, நிலநடுக்கம், பலி

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கங்களில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

துருக்கியில் 3500 பேரும், சிரியாவில் 1500 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
|
|
|