Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூரில் அதிகரிக்கும் கொரோனா...வட்டாட்சியர் மற்றும் 6 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூரில் அதிகரிக்கும் கொரோனா...வட்டாட்சியர் மற்றும் 6 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Thu, 09 July 2020 1:26:13 PM

திருவாரூரில் அதிகரிக்கும் கொரோனா...வட்டாட்சியர் மற்றும் 6 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தோற்று தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700-ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஆனால் தற்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

coronavirus virus,vulnerability,vao,treatment ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,விஏஓ,வட்டாட்சியர்,சிகிச்சை

ஆரம்ப கட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்கிளல் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூரில் ஒரு வட்டாட்சியர் மற்றும் 6 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|