Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ்; மாவட்டங்கள் வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ்; மாவட்டங்கள் வாரியாக முழு தகவல்

By: Monisha Mon, 17 Aug 2020 09:36:24 AM

தமிழகத்தில் ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ்; மாவட்டங்கள் வாரியாக முழு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,950 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 125 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், மாநிலத்தில் ஒரே நாளில் 6,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 2,78,270 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று 70,450 மாதிரிகளும், 68,444 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 37,11,246 மாதிரிகளும், 35,81,939 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த அளவில் நேற்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 5,950 நபர்களில் 1,196 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,16,650 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,454 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

tamil nadu,corona virus,infection,treatment,discharge ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக குணமடைந்தோர் விவரம்:-

அரியலூர் - 16
சென்னை - 1009
செங்கல்பட்டு - 422
கோவை - 182
கடலூர் - 184
தருமபுரி - 06
திண்டுக்கல் - 201
ஈரோடு - 42
கள்ளக்குறிச்சி - 57
காஞ்சிபுரம் - 307
கன்னியாகுமரி - 178
கரூர் - 08
கிருஷ்ணகிரி - 31
மதுரை- 104
நாகப்பட்டினம்- 3
நாமக்கல் - 44
நீலகிரி - 18
பெரம்பலூர் - 31
புதுக்கோட்டை - 44
ராமநாதபுரம் - 18
ராணிப்பேட்டை - 248
சேலம் - 309
சிவகங்கை - 46
தென்காசி - 270
தஞ்சாவூர் - 194
தேனி - 319
திருப்பத்தூர் - 46
திருவள்ளூர் - 294
திருவண்ணமலை - 133
திருவாரூர் - 3
தூத்துக்குடி - 195
திருநெல்வேலி - 148
திருப்பூர் - 36
திருச்சி - 113
வேலூர் - 204
விழுப்புரம் - 67
விருதுநகர் - 379

Tags :